உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு

Tuesday, March 27, 2012


கவிப்பேரரசு வைரமுத்து

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு , இதை உரக்கசொல்வோம் உலகிற்கு.

இனம் ஒன்றாக மொழி வென்றாக, புது வேலை எடுப்போம் விடிவிற்கு.

நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால் விருந்து வைப்போம் விண்ணுக்கு.
பிறந்த பிள்ளை நடந்து பழக கையில் வேலை கொடுப்போம்.

பிறந்த குழந்தை இறந்து பிறந்தால் வாளால் கீறி புதைப்போம்.
யுத்த சத்தம் கேட்டால் போதும் முத்தச்சத்தம் முடிப்போம்.

ரத்த குளத்தை நிரப்பி நிரப்பி வெற்றி தாமரை பறிப்போம்.
எங்கள் மண்ணை தொட்டவன் கால்கள் எங்கள் நிலத்தில் உரமாகும்.
எங்கள் பெண்ணை தொட்டவன் கைகள் எங்கள் அடுப்பில் விறகாகும்.
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு, இதை உரக்கசொல்வோம் உலகிற்கு.

இனம் ஒன்றாக மொழி வென்றாக, புது வேலை எடுப்போம் விடிவிற்கு.
நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால் விருந்து வைப்போம் விண்ணுக்கு !!

                          - கவிப்பேரரசு வைரமுத்து 











ஹரி பாபு.

0 comments:

Shopes

About This Blog


Lorem Ipsum

  © Free Blogger Templates Nightingale by Ourblogtemplates.com 2008

Back to TOP