மறுபடியும்

Wednesday, April 13, 2016

இந்த நிலம் இரத்தத்தின் பிசுபிசுப்பை
கேட்டு அழுகிறது
மிச்சமில்லாமல் எல்லாம் போனபிறகும்
சாம்பல்மேடு சடலங்களை கேட்கிறது திரும்பவும்

சமீபத்தில
சப்தமில்லாம் கிடந்த பீரங்கிகள் பசியெடுத்து
சாப்பாடுபோடு என் விழிபார்க்கிறது
இங்கே எதுவுமேயில்லை
அழுகுரல்களையும் பிணநாற்றத்தையும் தவிர
ஆனாலும்
இந்த நிலம் இரத்தம் கேட்டு அழுகிறது

பார்க்கும் திசையெல்லாம்
முள்ளுச்செடிக்குக் கீழே எலுப்புகள் மின்னுகிறது
தோண்டும் பக்கமெல்லாம் கல்லுகளிற்கிடையே
மண்டையோடுகளும் சிக்குகிறது

என் கடைசித்தளிரின்
இரத்தத்தை யாசகம் கேட்டு
இந்தமண் இன்னும் அழுதுகொண்டுதானிருக்கிறது

ஹரி பாபு.

Read more...

Shopes

About This Blog


Lorem Ipsum

  © Free Blogger Templates Nightingale by Ourblogtemplates.com 2008

Back to TOP